<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #21  
Old 06-08-09, 03:36 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
ஒற்றுப் பிழைகள் தவிர்க்க?

ஒற்றுப் பிழைகள் தவிர்க்க என ஒரு சூத்திரம் உண்டே தமிழில். அது எனக்கு மறந்து போய் விட்டது. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote
  #22  
Old 06-08-09, 03:39 PM
JACK JACK is offline
User inactive for long time
 
ஆமாம் நண்பர்களே யாருக்காவது தெரிந்தால் பகிந்து கொள்ளுங்கள் என்னை போன்ற ஆட்க்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Reply With Quote
  #23  
Old 06-08-09, 05:31 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
நானும் தேடி பார்த்ததில் அந்த சூத்திரம் கிடைக்கவில்லை. அதே நேரம் இலக்கண குறிப்புகள் எளிதாக புரியும் வண்ணமாக கிடைத்தன.

புதுச்சேரி தளத்தில் இருந்து:



வல்லெழுத்து மிகுமிடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-

வல்லெழுத்து மிகும் உதாரணங்கள்::-

▪ தமிழை + கண்டேன்   = தமிழைக் கண்டேன்.
▪ தமிழை + சந்தித்தேன் = தமிழைச் சந்தித்தேன்.
▪ தமிழை + தந்தேன்     = தமிழைத் தந்தேன்.
▪ தமிழை + பார்த்தேன்  = தமிழைப் பார்த்தேன்.

அதிகமாகப் பிழை செய்யுமிடங்கள்::- 


          

கீழ்வரும் இடங்களில் பொதுவாக அனைவருமே ஒரு சில சமயங்களில் தவறுகிறோம்:- -

இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = ஐ):-


(உ-ம்)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,

நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-


(உ-ம்)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்

ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-


(உ-ம்)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு

ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் (உருபு = அது, உடைய):-


(உ-ம்)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)

இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-


(உ-ம்)


இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)


மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)


ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)


ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)


பொதுவாக வல்லெழுத்துக்கள் மிகும் சில இடங்கள்::-

          

பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
▪ (உ-ம்)
▪ அந்த + கரண்டி   = அந்தக் கரண்டி.
▪ இந்த + சிற்பம் = இந்தச் சிற்பம்.
▪ எந்த + பட்டம்     = எந்தப் பட்டம்.
▪ அப்படி + போனான்  = அப்படிப் போனான்.
▪ இப்படி + பார்த்தான்   = இப்படிப் பார்த்தேன்.
▪ எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான்.
▪ அங்கு + சென்றான்     = அங்குச் சென்றான்.
▪ இங்கு + தங்கினான்  = இங்குத் தங்கினான்.
▪ எங்கு + கண்டாய்  = எங்குக் கண்டாய்.
▪ இனி + கேள்  = இனிக் கேள்.
▪ தனி + தமிழ்  = தனித் தமிழ்.
▪ என + சொன்னாள்  = எனச் சொன்னாள்.
▪ மற்று + பாடலாம்  = மற்றுப் பாடலாம்.
▪ மற்ற + குதிரைகள்  = மற்றக் குதிரைகள்.
▪ மற்றை + கனவு  = மற்றைக் கனவு.
▪ முன்னர் + கண்ட  = முன்னர்க் கண்ட.
▪ பின்னர் + கேட்ட  = பின்னர்க் கேட்ட.
▪ எல்லா + பெண்கள்  = எல்லாப் பெண்கள்.
▪ அவ்வகை + சிற்பம்  = அவ்வகைச் சிற்பம்.
▪ இவ்வகை + பண்பு  = இவ்வகைப் பண்பு.
▪ எவ்வகை + தோற்றம்  = எவ்வகைத் தோற்றம்.

வல்லெழுத்து மிகும் மற்றும் சில இடங்கள்:- 
          

பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-

(உ-ம்)
பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-

அ, இ, எ, ய், ர், ழ்

(உ-ம்)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்


ஓரெழுத்தொரு மொழி:-
தீ, பூ, ஈ

(உ-ம்)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்


உவமைத் தொகை:-


(உ-ம்)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)

பண்புத் தொகை:-


(உ-ம்)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)

"த்து" என்று முடியும் சொற்களையடுத்து:-


(உ-ம்) 
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து:-


(உ-ம்)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து:-


(உ-ம்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

வினையெச்சங்களில் ஒற்று:- 
          

பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும். 
(உ-ம்) ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்
(உ-ம்)
▪ நன்றாக + பாடினாள்  = நன்றாகப் பாடினாள்.
▪ ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.
▪ போய் + செய்     = போய்ச் செய்.
▪ அன்றி + சொல்லான் = அன்றிச் சொல்லான்.
▪ இன்றி + போவான்  = இன்றிப் போவான்.
▪ போல + செய்= போலச் செய்.

வல்லெழுத்து மிகா இடங்கள்:

கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது, இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க், ச், த், ப்," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேருமிடங்களையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-

வல்லெழுத்து மிகா உதாரணங்கள்::- 
அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது.


▪ அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.
▪ இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.
▪ எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?
▪ அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.
▪ இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.
▪ எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?
▪ அவை + பெரியவை = அவை பெரியவை.
▪ அது + பெரியது = அது பெரியது.
▪ இவை + சிறியவை = இவை சிறியவை.
▪ இது + சிறியது = இது சிறியது.
▪ எவை + தந்தன = எவை தந்தன?
▪ எது + தந்தது = எது தந்தது?
▪ யாவை + பெரியவை = யாவை பெரியவை?
▪ ஏது + கடல் = ஏது கடல்?


ஒற்றெழுத்து மிகாத சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்::- 


 
         

எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், "த்த", "ந்து" என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது. உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. :- -

எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-


(உ-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-


(உ-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்

வினைத் தொகைகள்:-


(உ-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை

உம்மைத் தொகைகள்:-


(உ-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)

"த்த, ந்து" என முடியும் சொற்கள்:-


(உ-ம்)

பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்



நண்பர் பிகேசிவக்குமாரின் ப்ளாக்கில் இருந்து :

குறிப்பு: வல்லின எழுத்துகளில் ட், ற் என்பன சந்தி எழுத்துகளாக வரவே வராது. க், ச், த், ப் என்பவையே சந்தி எழுத்துகளாக வரும்.

வருமொழியின் முதலெழுத்து க், ச், த், ப் ஆகியவற்றின் வர்க்க எழுத்துகளில் ஒன்றாக வந்தால் வல்லின ஒற்று சில இடங்களில் மிகும்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள்:

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.

2. அந்த, இந்த, எந்த என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

3. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லினம் மிகும்.

4. அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

5. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

6. எட்டு, பத்து என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)

8. இரண்டாம் வேற்றுமை விரி அல்லது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில், வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: அவனைக் காப்பாற்று)

9. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும் (உதாரணம்: நீர்க்குடம். நீரை உடைய குடம் என்று விரியும்)

10. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும். (உதாரணம்: வெள்ளித் தட்டு - வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு என்று விரியும்.)

11. நான்காம் வேற்றுமை விரி (அல்ல்லது நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில்) வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: தந்தைக்குக் கடமை)

12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அ·றிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: வேலிக் கம்பி - வேலிக்குக் கம்பி என்று விரியும்)

13. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் - நிலைமொழி அ·றிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: கூலிப்படை - கூலிக்குப் போர்புரியும் படை என்று விரியும்)

14. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அ·றிணையாயின் பெரும்பாலும் வல்லினம் மிகும். (உதாரணம்: புலமைச் சிறப்பு - புலமையது சிறப்பு என்று விரியும்)

15. ஏழாம் வேற்றூமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்ப்பாம்பு - நீர்க்கண் வாழும் பாம்பு என்று விரியும்.)

16. நிலைமொழியின் இறுதியில் ய், ர், ழ் என்னும் எழுத்துகள் இருக்க, வருமொழி பெயர்ச்சொல்லாயின் இடையில் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்க் கோலம், தாய்ப் பாசம், தமிழ்க் கட்டுரை)

17. பண்புத் தொகையில் வல்லினம் மிகும் (உதாரணம்: பெருமைக் குணம், அருமைத் தம்பி, நகைச்சுவை, வெள்ளைக்குதிரை)

18. இருபெயரொட்டு பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மழைக்காலம், செவ்வாய்க் கிழமை, சாரைப் பாம்பு)

19. உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மலர்க்கண் - மலர் போன்ற கண், சர்க்கரைத் தமிழ்)

20. போல என்னும் உவம உருபின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: பாம்பு போலச் சீறினான்)

21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.

22. இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: தேடிச் சென்றான், நாடிப் போனான்)

23. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: காணக் கூடாது, படிக்கப் பயப்படாதே.)

24. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாய்க் கூறினான், போய்ப் பார்)

25. ஆக, போக என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாகக் கேள், போகக் கூடாது.)

26. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: கேளாக் கொடு, காணாச் சிரித்தான்.)

27. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

28. சித்திரை முதலான மாதங்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

29. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து வரின் வல்லினம் மிகும். ஓரெழுத்து ஒரு மொழிக்கும் இது பொருந்தும். (உதாரணம்: கல்விக் கடல், அறிவுச் சுடர், தீப் பற்றியது, கைப்பிடி)

30. இனி, என என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

31. எழுவாய்த் தொடரானாலும் நிலைமொழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழி முன் வல்லினம் பெரும்பாலும் மிகும். (உதாரணம்: தீச்சிறியது, நாக்குழறியது)

32. எழுவாய்த் தொடரில் குறில் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: இராப் பகல்)

33. எழுவாய்த் தொடரில் இரு நெடில்களில் பின் வல்லினம் மிகும். (தாராப் பறந்தது, ஆமாத் துரத்தினான்)

34. கடு, விள என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும். (கடுச் சிறிது, விளத் தீது)


வல்லின ஒற்று மிகா இடங்கள்:

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

3. அவை, இவை, எவை, அத்தனை, இத்தனை, எத்தனை என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

4. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

5. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

6. அன்று, இன்று, என்றூ என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

7. மென்றொடர்க் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகாது.

8. எண்ணுப் பெயர்களான, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

9. ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது.

10. முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்.)

11. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: நீர் குடித்தான்)

12. மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கை தட்டினான்)

13. மூன்றாம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகாது. (உதாரணம்: தந்தையோடு சென்றான்.)

14. சிறு, சிறிய, பெரிய என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

15. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வல்லினம் மிகாது. (உதாரணம்: தங்கை பெண், கண்ணகி கேள்வன்)

16. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் உயர்திணையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தக்கோர் சால்பு)

17. ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது. (உதாரணம்: காளி கோயில்)

19. ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கண்ணனது கை)

20. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தரை படுத்தான்.)

21. எட்டாம் வேற்றுமை என்னும் விளி வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தலைவா கொடும், நாடே தாழாதே.)

22. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தாழ்குழல், காய்கதிர்)

23. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கபிலபரணர், செடிகொடி, வெற்றிலை பாக்கு)

24. வினைமுற்றுத் தொடர்களில் வல்லினம் மிகாது. (உதாரணம்: ஓடின குதிரைகள், போயின பசுக்கள்)

24. படி என்னும் இறுதியுடைய சொல் வினையுடன் சேர்ந்து வரும்போது வல்லினம் மிகாது. (உதாரணம்: வரும்படி சொல், போகும்படி சொல்லாதே.)

25. பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: வந்த கன்று, சென்ற தாய், ஓடிய சிறுவன்)

26. உகர ஈற்று வினையெச்சத்தின்பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: சென்று கண்டான், தின்று கொழுத்தான்)

27. ஆ என்னும் எழுத்தை இறுதியில் கொண்டுள்ள வினாச்சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: அவனா சொன்னான், அப்படியா சொன்னான்)

28. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

29. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.

30. நனி, கடி, மா என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

31. ஒரு, இரு, அறு, எழு என்னும் விகார எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.


இவை அனேகமாக உதவியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் அனைத்தும் மூல படைப்பாளிகளையே சாரும்.
Reply With Quote
  #24  
Old 06-08-09, 05:39 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
நினைச்சேன் அப்பவே! தங்குதடையற்ற எழுத்தாற்றல் மிக்க விஜி இங்கு பதில் தருவார் என்று! செஞ்சுட்டார்! நன்றி விஜி, நல்ல விளக்கம்!!
Reply With Quote
  #25  
Old 08-08-09, 01:58 AM
srajah srajah is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by asho View Post
இணையத்தில் கிடைத்தது
அசோ சார் நீங்கள் தமிழ் இலக்கிய வித்துவானா? நம்பவே முடியவில்லை. அப்பொழுதே நினைச்சேன். ஏதாவது திறமை இருக்க வேண்டும் என்று. பேசாமல் உங்களிடம் நாம் அப்போது கற்காதவைகளை கற்கலாம் போல் உள்ளதே.
Quote:
Originally Posted by oshoviji View Post
[FONT="Latha"]நானும் தேடி பார்த்ததில் அந்த சூத்திரம் கிடைக்கவில்லை. அதே நேரம் இலக்கண குறிப்புகள் எளிதாக புரியும் வண்ணமாக கிடைத்தன.
[COLOR="Blue"]
புதுச்சேரி தளத்தில் இருந்து:


FONT]
ஓசோவிஜியும் சளைத்தவர் அல்ல என்பதை எடுத்துக்காட்டிவிட்டார். உங்களிடம் தமிழ் படிக்கலாம் என்று தோன்றுகிறது. இருவரையும் பாராட்டுகிறேன்.
ஓங்குக வையகமெல்லாம் தமிழ் தந்த காமலோகம்.
Reply With Quote
  #26  
Old 08-08-09, 02:07 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலில் இந்தத் தலைப்பை 'ஒற்றுப் பிழைகள் களையச் சொல்லித் தாருங்கள்' என்று மாற்றி விடுங்களேன். கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது! (இல்லை வேண்டுமென்றே - அதாவது படிப்பவர் புரிந்து கொள்ள - வைத்திருக்கிறீர்களா?)
Reply With Quote
  #27  
Old 08-08-09, 12:01 PM
JM JM is offline
User inactive for long time
 
மிகவும் உபயோகமான பாடம். ஆரம்பத்திலிருந்தே நமக்கும் இந்த ஓற்றுக்கும் சரிப்பட்டுவராது. அரிசிகேட்டால் இட்லி கொடுக்கும் (உபயம்-ஸ்மார்ட்) அசோ அண்ணாவுக்கும், அன்பு நண்பர் ஓசோ விஜிக்கும் நன்றி. (ஆமா இந்தப் பாடத்தை முழுவதும் படித்து விட்டீர்களா என்று கேட்கிறீர்களா, இல்லை...! வழக்கம் போல் 'பேவரைட்டில்' போட்டு வைத்திருக்கிறேன்.)
Reply With Quote
  #28  
Old 08-08-09, 04:01 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by JM View Post
(ஆமா இந்தப் பாடத்தை முழுவதும் படித்து விட்டீர்களா என்று கேட்கிறீர்களா, இல்லை...! வழக்கம் போல் 'பேவரைட்டில்' போட்டு வைத்திருக்கிறேன்.)
ஹீஹீ அதே அதே
Reply With Quote
  #29  
Old 08-08-09, 05:12 PM
kas12345 kas12345 is offline
*Reactivated 2/9/12
 
அஷோ அவர்களுக்கும் ஓஷோவிஜி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. திரும்பவும் எங்களை எல்லாம் மாணவர்களாக்கி எங்களுடைய தமிழ் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு எவ்வளவு முறை நன்றி கூறினாலும் தகும்.
Reply With Quote
  #30  
Old 08-08-09, 05:58 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by KANNAN60 View Post
முதலில் இந்தத் தலைப்பை 'ஒற்றுப் பிழைகள் களையச் சொல்லித் தாருங்கள்' என்று மாற்றி விடுங்களேன். கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது! (இல்லை வேண்டுமென்றே - அதாவது படிப்பவர் புரிந்து கொள்ள - வைத்திருக்கிறீர்களா?)
தலைப்பை மாற்றி விட்டேன். வேண்டுமென்றே எல்லாம் அப்படி வைக்கவில்லை. நீங்க வேற...
Reply With Quote
Reply

Tags
சொல்லி , பிழைகள் , ஒற்று , களைய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,