<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 25-09-20, 02:23 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,607
My Threads  
பாடும் நிலா பாலு(எஸ். பி. பாலசுப்ரமணியம்) காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த தகவல் அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 'சிகரம்' தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் 'பாலு' என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது.

கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.,23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது. ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி.,. ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தவர், இப்போது நிரந்தரமாக தூங்க சென்றுவிட்டார். இந்த பாடும் நிலா மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மங்காமல் ஒலித்து கொண்டே இருக்கும்.

மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த எஸ்.பி.பி., மகன் எஸ்.பி.சரண் கூறியதாவது: சரியாக 1:04 மணிக்கு உயிர்பிரிந்தது. எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும் வரை அவரது பெயர் நிலைத்திருக்கும் எனக்கூறினார்.

அவரது ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

நன்றி - தினமலர்
Reply With Quote
  #2  
Old 25-09-20, 02:37 PM
devid devid is offline
User inactive for long time
 
Join Date: 08 Feb 2018
Location: Tamil nadu
Posts: 17
My Threads  
இசை உலகில் முக்கியமானதொரு இழப்பு. அவரின் வெற்றிடத்தை நிரப்புவது கடினமே. பல கதாநாயகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். என்றும் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். நன்றிகள் SPB.
Reply With Quote
  #3  
Old 25-09-20, 02:51 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
மிகப்பெரிய இழப்பு! மேதை அவர்....! இனிமையான குரல். அனாயாசமாக பாடும் பாங்கு!

ஓடிக்கொண்டே...மூச்சு விடாமல் பாடும் பாடல் இன்னும் நினைவில் இருக்கு !

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்.....
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்....
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்.... (வைரமுத்து)

மௌனி
Reply With Quote
  #4  
Old 25-09-20, 02:58 PM
manesh74 manesh74 is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Aug 2010
Posts: 59
iCash Credits: 3,579
My Threads  
இசையுலகின் மிகப்பெரிய இழப்பு
Reply With Quote
  #5  
Old 25-09-20, 07:56 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,920
My Threads  
எழுபதுகளிலும் என்பதுகளிலும் என்னற்ற மனதில் நிற்கும் பாடல்களைப் பாடிய அவரை எப்போதும் மறக்க முடியாது. அவரை இருந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #6  
Old 25-09-20, 08:39 PM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,469
iCash Credits: 55,719
My Threads  
பள்ளிக் காலம் முதல் இன்று வரை இளையராஜாவால் இசையமைத்து எஸ்பிபி பாடிய பாடல்கள் என்னை ஆக்கிரிமித்துக் கொண்டிருக்கிறது. அவர் உடல் மறைந்தாலும் பாடல்கள் மூலம் ஆன்மா ரசிகர்களிடம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது. பாடு நிலாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Reply With Quote
  #7  
Old 25-09-20, 10:50 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,515
My Threads  
தேன்குரல் மன்னன் என்ற பட்டத்தை பெற தகுதியானவர் எஸ் பி பி மட்டுமே . எந்த மொழியில் பாடினாலும் , அந்த மொழி உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர் . வெகு தூர பிரதேசங்களில் இருந்து வந்த புது பாடகர்களால் அவருடைய வாய்ப்புகள் குறைந்தபோது , அதைப்பற்றி கவலைப்படாமல் புதிய பாடகர்கள் தமிழை நன்கு உச்சரித்து பாட வேண்டும் என்ற கருத்தை துணிந்து சொன்னவர் .
எந்த நாயகனுக்கும் அவருக்கு ஏற்ற குரலில் பாடும் வன்மை கண்டவர் .
அவரது ஆத்மா சாந்தி அடைக ....
Reply With Quote
  #8  
Old 25-09-20, 11:28 PM
salem1963 salem1963 is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2015
Posts: 677
My Threads  
ஒரு நல்ல மனிதர் மறைவு ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Reply With Quote
  #9  
Old 26-09-20, 12:22 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,861
My Threads  
மிக பெரிய இழப்பு மீண்டு வருவேன் என சொல்லி ஏமாற்றி விட்டார் !! ஆழ்ந்த வருத்தங்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #10  
Old 26-09-20, 05:15 AM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
Thumbs up

சிகரம் தொட்ட மாமனிதர்.....அன்பும்,பண்பும்,பணிவும் மிக்க மாபெரும் இசைகலைஞனை இப்படி காலன் கொண்டு செல்வான் என்று நினைத்து பார்க்கவில்லை...பிறந்தவர் எல்லோரும் ஒரு நாள் இறக்ககூடும் என்ற புத்திக்கு தெரிந்த உண்மையை மனசு உணர மறுக்கிறது...

உதயகீதம் படத்தில் அவர் பாடிய வரிகள்.....

""இந்த தேகம் மறைந்தாலும்,இசையாய் மலர்வேன்..""

சென்று வாருங்கள் எஸ்.பி.பி...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,