<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0108 - அபாயம் நெருங்காதே - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0108 - அபாயம் நெருங்காதே - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0108 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான sajid80 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'அபாயம் நெருங்காதே' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் kay, anabayan, tdrajesh, kamakodangi68, மற்றும் alaga ஆகிய ஐவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். ஐவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 27 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 9 வாக்குகள் பெற்று anabayanமுதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0108 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வெற்றி பெற்ற படைப்பாளியான anabayan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் anabayan இந்த முறை இரண்டாவது இடத்தை tdrajesh பெற்றுள்ளார். முதல் பரிசை ஒரு வாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 இ.பணம் பெறுகிறார். தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர் வெற்றி பெற்ற anabayan க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) anabayan - 9 வாக்குகள் 2) tdrajesh - 8 வாக்குகள் 3) kamakodangi68 - 5 வாக்குகள் 4) kay - 4 வாக்குகள் 5) alaga - 1 வாக்கு இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. திரி தயாரிப்பு : Nallavan1010, நி.உதவியாளர். -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
சவால் ராஜா அநபாயனுக்குப் பாராட்டுகள்.
முதலிடத்தை ஒரு வாக்கு வித்தியாசத்தில் இழந்த தம்பி ராஜேஷுக்கு வாழ்த்துகள். பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. |
#3
|
|||
|
|||
முதலிடம் வென்ற நண்பர் அநபாயன் அவர்களுக்கும் 2மிடம் பெற்ற நண்பர் டிடிராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கெடுத்த நண்பர்களுக்கும் வாக்கு போட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
|
#4
|
|||
|
|||
மூலக்கதையை மிக அழகாக கையான்டு சுவாரசியம் மிகுந்ததாக கதையின் தொடர்ச்சியை அமைத்து அனைவரையும் ரசிக்க வைத்தது மட்டும் அல்லாமல் அடுத்து என்ன நடக்குமோ என்ற திகில் கலந்த கிரைம் திரைப்படத்திற்கு இனையான கருவை கொடுத்து வெற்றியும் அடைந்த கற்பனை சிகரம் மதிப்பிற்குறிய அநபாயன் அவர்களுக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!...
|
#5
|
||||
|
||||
நான்காவது முறையாக சவால் ராஜாவாக வெற்றி வாகை சூடிக் கொண்ட கேப்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு பயங்கர டஃப்னெஸ் கொடுத்து ஆறுதல் பதக்கம் பெறும் அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்கள் காமக்கோடாங்கி, கே, அழகா அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
|||
|
|||
சவால் ராஜா அண்ணன் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்கள். ஆறுதல் பதக்கம் பெறும் ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#7
|
|||
|
|||
மூலகதையை எழுதியவன் என்ற முறையில் தொடர்ச்சியை கொடுத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் நன்றி...
போட்டியில் வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கும் அடுத்தடுத்தவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் எல்லோரின் தொடர்ச்சியையும் படித்தேன் மிக்க சந்தோஷம்.. தனி தனியாக கதைக்கு பின்னூட்டமிடவில்லை... அனைவரும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்.... கதை எழுதிய எழுத்தாளர்கள் 5 பேருக்கும் என் சிறிய அன்பளிப்பாக தலா ஆயிரம் இ.பணங்களை பரிசளிக்கிறேன்.. |
#8
|
|||
|
|||
இப்போட்டியில் வெற்றி பெற்று நான்காவது முறையாக சவால் ராஜாவாகும் நண்பர் அநபாயனுக்கு என் பாராட்டுகள்.
எனக்கு வாக்களித்து இரண்டாம் இடம் பெற்றுக்கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றி. போட்டியில் பங்கேற்ற மற்ற படைப்பாளிகளுக்கு என் பாராட்டுகள். |
#9
|
|||
|
|||
நி.சவால் 108 ல் பங்கு கொண்டு நான்காவது முறையாக நி.சவாலில் முதலிடத்தை பிடித்துள்ள புவியரசர் அநபாயன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய கற்பனை திறத்திற்கும் எழில் மிகு நடைக்கும் உழைப்பிற்கும் நல்லதொரு பரிசாக இந்த வெற்றி அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மனமார்ந்த வாழ்த்துக்கள் புவியரசே.
அடுத்து காமலோக மக்களுக்கு கதைகளை தருவதே குறிக்கோள் என்டக்கொண்டு கதைகளை அள்ளித்தரும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். 10 முறை சவால் நாயகனானவர். மிகவும் ரசிக்கத்தக்க கதைகளை படைத்து நம்மை மகிழ்விக்கும் நண்பர் இம்முறை இரண்டாம் இடம் பிடித்து புவியரசருக்கு மிகவும் கடிகனமான போட்டியை தந்து வெற்றியை ஒரே வாக்கில் தவறவிட்டிருக்கிறார். இவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். சமீப காலங்களில் சவால் போட்டிகளில் சிறப்பாக கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர் காமகோடங்கி அவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். அவரும் கற்பனையில் சளைத்தவர் இல்லை. இந்த சவால் போட்டியில் காம நெடியுடன் காமடியையும் இணைத்து சிறப்பான தொடர்ச்சிகளை தந்திருக்கிறார். இவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் கடினமான இந்த சவாலை ஏற்று முதலில் களமிறங்கியவர் நண்பர் கே. இவரது இந்த முயற்ச்சியை என்ன பாராட்டினாலும் தகும். ஒரு சரித்திர நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு நி.சவால் கதையை படைத்துள்ள இவரது கற்பனை திறம் அபாரமானது. இவரது முயற்ச்சிக்கும் உழைப்பிற்கும் போட்டியில் களமிறங்கவேண்டும் என்ற ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். ஒரே பாகம் தந்தாலும் எழில் மிகுபாகமாக அமைத்து சிறப்பான தொடர்ச்சியை தந்துள்ள நண்பர் அழகா அவர்களுக்கும் பாராட்டுக்கள். அருமை நண்பர்களே கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது இந்த திருக்குறளுக்கேற்றாற்போல் கடினமான கருவை கையில் எடுத்துக்கொண்டு இங்கு இந்த நிர்வாக சவாலில் தொடர்ச்சிகள் தந்துள்ள அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தான். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே. வாழ்த்துக்கள் நண்பர்களே. Last edited by Nallavan1010; 25-09-15 at 06:03 AM. |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் அனபாயன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். அடுத்து வந்த நண்பர்கள் டிடிராஜேஷ், காமக்கோடங்கி அவர்களுக்கும் அழகா அவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள். நண்பர் சஜித் அவர்கள் இந்த மூலக்கதையை எழுதவில்லை என்றால் எங்களின் விதவிதமான இனிய தொடர்ச்சிகள் வந்திருக்கா. அவருக்கும் அவர் அளித்த பரிசுக்கும் நன்றி! ஊக்கமளிக்கும் நிர்வாகத்தினருக்கும், என் தொடர்ச்சிக்கு வாக்களித்த நண்பர்களுக்கும், இனிய பின்னூட்டம் அளித்த தோழர்களுக்கும், நிறைய வியூ செய்த நண்பர்களுக்கும் நன்றி! நிர்வாக சவால்கள் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்று தலைவரே பல முறை கூறி இருக்கிறார். எனினும் 27 வாக்குகள் மட்டுமே இப்படிப்பட்ட அரிய கதைகளுக்குக் கிடைப்பது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது. நல்ல ஊக்கமும் வாழ்த்துரையும் அளித்த நண்பர் நல்லவன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி! 'திகில் இரவு' கதாசிரியர்கள் பலரும் இந்தச் சவாலில் பங்கெடுக்கவில்லை. அனைவரும் மீண்டும் இன்னொரு மர்ம நிர்வாக சவால் கதையில் பங்கெடுத்தால் மிகவும் மகிழ்வேன்! நன்றி!
|
|
|
|