<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அஞ்சலி : கலாபவன் மணி அகால மரணம்.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து, தன் வித்தியாசமான நடிப்பாலும் தனிச்சிறப்பான வசன உச்சரிப்பாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் கலாபவன் மணி இன்று இரவு 7. 15 மணிக்கு அகால மரணம் அடைந்தார்.
அடிப்படையில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகிய கலாபவன் மணி(கலாபவன் என்பது கொச்சியில் உள்ள ஒரு பிரபல கலைப்பயிற்சி பள்ளி. அங்கு பயின்றவர்கள் அதை பெருமையாக தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது மலையாள திரைஉலகில் வழக்கமாக உள்ளது- அதுதான் “கலாபவன்” மணி) ஆரம்பத்தில் சாலக்குடியில் ஓர் ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்பு மிமிக்ரி படித்து ஊர் ஊராக ஷோ நடத்தி , பின் திரையுலகிற்கு முன்னேறியவர். நடிகராக மட்டுமின்றி , நாட்டுப்புற பாடகராகவும் புகழ் பெற்றவர் இவர். 1999 ஆம் ஆண்ட்டில் ”வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்” என்ற படத்தில் பார்வை இழந்தவர் வேடத்தில் சிறப்பாக நடித்து, மாநில அரசின் விருதுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு , இரண்டாம் இடத்தை பெற்று, நடுவர்களின் சிறப்பு விருதை மட்டும் பெற்றார். அந்த ஆண்டு தேசிய விருதுகளிலும் நடுவர்களின் சிறப்பு விருது அதே படத்துக்கு அவருக்கு கிடைத்தது. அதிகம் மலையாள படங்களில் நடித்து இருந்தாலும், தமிழ்ப்படங்களிலும் சில சிறந்த வேடங்கள் அவருக்கு அமைந்தன. ” மறுமலர்ச்சி “ படத்தில் மம்முட்டியின் விசுவாசமான அநாதை வேலைக்காராக வந்து உயிரை விடும் வேடத்தில் மனதை தொட்டிருப்பார். ”ஜெமினி” படத்தில் வில்லன் வேசத்தில் வந்து நடிப்போடு தன் மிமிக்ரி திறமையையும் வெளிப்படுத்தி அசரடித்து இருப்பார். ”ஜே ஜே” படத்தில் சற்று திறமை குறைவான திருடராக வந்து ஒவ்வொரு முறையும் மாட்டிக்கொள்வார். புத்திசாலியாக தேவைக்கு மட்டுமே திருடும் மாதவனிடம் சீடராக சேர்ந்து கொண்டு, அவர் செய்யும் ஒவ்வொன்றும் பிள்ளையார் பிடிக்க பொய் குரங்காக முடியும். கடைசியில் முதல் தடவையாக அவர் சரியாக செய்யும் திருட்டுதான் படத்தையே முடித்து வைக்கும். ”அந்நியன்” படத்தில் கோர்ட்டில் அப்பாவி வீடு ஓனராகவும், வெளியே வந்தவுடன் அடப்பாவி என்று திட்டு வாங்கும் ஓனராகவும் வந்து அடுத்த காட்சியிலேயே அன்னியனால் தண்டிக்கப்பட்டு இருந்து போவார். கடைசியாக ”பாபநாசம்” படத்தில் கெட்ட போலிஸ்காரராக வந்து படம் முழுதும் கமல் குடும்பத்தையும் , படம் பார்பவர்களையும் ஊசிமுனையிலேயே வைத்த காரக்டர்- கலக்கியிருப்பார் இரு நாட்களுக்கு முன் கல்லீரல் கோளாறுகளுக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மணி இன்று இரவு 7. 15க்கு மரணமடைந்தார் 45 வயதே ஆகி இருந்த மணியின் மரணம் ஒரு நல்ல எதிர்காலம் இருந்த நடிகரை இழந்து விட்டதாக பலரும் கருது தெரிவித்து உள்ளார்கள். ஆச்சரியமாக பிரதமர் நரேந்திர மோதியும் ட்வீடரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அஞ்சலிகள் கலாபவன் மணி. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். Last edited by Kanchanadasan; 07-03-16 at 01:13 PM. |
#2
|
|||
|
|||
மிமிக்ரியுடன் கூடிய அவரது வசன உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும்.
ஒரு திருத்தம்: இயற்கை மரணத்னத 'அகால' மரணம் என்று குறிப்பிட மாட்டார்கள். |
#3
|
|||
|
|||
மிக சிறந்த நடிகர்...படைப்பாளி..
வேல் படத்தில் அவரது வில்லன் வேடத்தை சிறப்பாக செய்திருப்பார்... சமீபத்தில் கல்லீரல் பிரச்சனையால் காலமான இரண்டாவது மலையாள வி.ஐ.பி. ...ஆன்மா சாந்தி அடையட்டும் |
#4
|
||||
|
||||
அவர் கிராமீய பாடல்கள் மல்லு உலகில் மிக பிரசித்தம்..
ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.. |
#5
|
|||
|
|||
Quote:
மேலும் வயது முதிராத ஒரு மரணம் இயற்கை என்றாலும் , விபத்து என்றாலும் அதை அகால மரணம் என்றுதான் குறிப்பிடுவார்கள் என்றுதான் நான் கருதுகிறேன், மற்ற தமிழ் ஆர்வலரான உறுப்பினர்கள்- நல்லவன் போன்றோர் தான் விளக்கம் சொல்ல வேண்டும். அஞ்சலி செலுத்தி இருக்கின்ற சக பதிவர்களுக்கு நன்றி, |
#6
|
|||
|
|||
அந்த ஒப்பற்ற நடிகருக்கு என் அஞ்சலி i அய்யா அம்மணி !
|
#7
|
|||
|
|||
சிறந்த நடிகர். ஆன்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
|
#8
|
||||
|
||||
மணி அவர்களின் மரணம் கலை உலகுக்கு பேரிழப்பு ..சில தெலுங்கு படங்களிலும் கலக்கி இருக்கிறார் அன்னார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ..
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|