<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #11  
Old 18-09-12, 10:25 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
மதன் நண்பரின் ஆதங்கம் இங்கே கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கிறது. அதே போல பின்னூட்டத்தைப் பற்றி ஆராய பதித்த நேரத்தை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
ஏனென்றால், புதுமலர் சொன்னதைப் போல, நானும் செய்துள்ளேன்!
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
நண்பர் மதனின் ஆதங்கம் புரிகின்றது.. இருந்த போதும் தொடர்ந்தார் போல் ஒருவரின் பின்னூட்டங்கள் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் வருகின்றது என்பதற்காகவே அவர் கதையைப் படிக்காமலேயே பின்னூட்டமிடுகின்றார் என்ற ஒரு முடிவுக்கும் நாம் வந்து விடக்கூடாது.. ஏனென்றால் சில வேளைகளில்.. அதுவும் இப்போது மின் தடை அதிகம் உள்ள இக்கால கட்டத்தில் நானெல்லாம் மொத்தமாக நேரம் கிடைக்கும் போது திரிகளைப் படித்து அதற்கு பின்னூட்டக் குறிப்புகளையும் நோட்பேடில் குறித்து வைத்துக் கொண்டு பிறகு வேறொரு சமயம் வரும் போது அந்த திரிகளை வரிசையாக எடுத்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இடுவதும் உண்டு.. அதனால் நண்பர் மதன் குறிப்பிடுவது போல் அடுத்தடுத்து பெயர்கள் வருவதும் உண்டு.. அதனால் திரிகளைப் படிக்காமலேயே இடும் பின்னூட்டமென்று யாரும் அதைக் கருதக் கூடாது.. பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தே அது அந்தத் திரிகளைப் படித்து பார்த்துப் பின் போடப்பட்ட பின்னூட்டமா? அல்லது படிக்காமலேயே போட்ட பின்னூட்டமா? என்ற ஒரு முடிவுக்கு நாம் வர வேண்டும் என அன்புடன் நண்பர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்..
அதனால் ஏதாவது விதிமுறை புதிதாக இயற்றப்பட்டால் இந்த கருத்தினையும் மனதில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #12  
Old 18-09-12, 10:43 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,290
My Threads  
நம் தளத்திலே இம்மாதிரி சக உறுப்பினர் பெயர் குறிப்பிட்டோ அல்லது பதிவுகளை கோட் செய்து பொதுவிலே புகார் தெரிவிக்கும் வழக்கம் நடைமுறையில் இல்லை, இதனால் வீனாக உறுப்பினர்களுக்கிடையே அபிப்பிராய பேதம் ஏற்படும்.

தவறான வழியில் செல்லும் சக உறுப்பினர் பற்றி நிர்வாகத்திற்கு தெரிவிக்க ரிப்போர்ட் போஸ்ட் ஒன்றே சிறந்த வழி, அது தலைமை நிர்வாகி அவர்களுக்கு நேரிடையாக செல்லும். அதே போல தலைமை நிர்வாகி அவர்களுக்கு தரும் தனிமடலும் சரி தான்.

பொதுவாக நம் தளத்தில் கருத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து அடுத்த வாசல் அனுமதி செல்ல நினைக்கும் ஒருசிலர் மட்டுமே இம்மாதிரி செய்கிறார்கள். மற்றபடி தங்கவாசல் மற்றும் பெயிட் மெம்பர்கள் இம்மாதிரி எப்போதும் செய்வதில்லை. எனவே மூத்த உறுப்பினர்களோ, அல்லது தரமான கருத்துக்கள் பதிந்து வருபவர்கள் கவலையடைய வேண்டியதில்லை.

இந்த திரியில் கருத்து பதிந்தவர் அனைவரும் தங்கவாசல் உறுப்பினர்களே, ஒரே ஒருவர் மட்டுமே ஜுனியர் உறுப்பினர், அதுவும் சமீபத்தில் உள்நுழைந்து வெற்றிநடை போட்டு வருபவர். மற்ற உறுப்பினர்களை இந்த திரி சோர்வடைய செய்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

எனவே தவறிழைப்பவர் பெயர் இந்த திரியில் குறிப்பிடாமல் எழுதுங்கள், அல்லது தவறான அந்த பதிவினை ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.
__________________
Reply With Quote
  #13  
Old 19-09-12, 07:57 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
இங்கே புதுமலர் மற்றும் கண்ணன் கூறியதுபோலவே, நானும் கதைகளை நேரம் கிடைக்கும்போது, படித்துவிட்டு, பின் சம்யம் கிடைக்கும் நேரத்திலே முடிந்த மட்டும் படித்த கதைகள் அனைத்திற்குமே பின்னூட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்..
சிலர், கதையை படிக்காமலே, படித்த மாதிரி, கதையை பற்றி எந்த விதமான கமெண்டும் அடிக்காமல், சூப்பர், அற்புதம், என மேலோட்டமாக எழுதி, எண்ணிக்கையை அதிகபடுத்துவதிலே கவனம் செலுத்தி, மற்ற வாசல்களை அடைய துடிக்கலாம்..
இங்கே மற்ற நிர்வாக மற்றும் மூத்த உறுப்பினர்கள் சொன்னதுபோல, இங்கே சொல்லாமல், தனி மடலிலே சொல்லுவதுதான் சாலசிறந்தது என எண்ணுகிறேன்..
Quote:
Originally Posted by Mathan View Post
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது"
இந்த ஒற்றை வாக்கியம் போதுமே,,
திருந்தும் காலம் வரும் என்ற நம்பிக்கையிலே காத்திருப்போம்!!
Reply With Quote
  #14  
Old 19-09-12, 08:47 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
எனக்கு ஒரு கதை படிக்கவே பல மணித்தியாலம் எடுக்கிறது. இதில் வேற என்னுடைய அலுவலகத்தில் இடையிடையே "வேலை" வேற செய்ய வேண்டும். ஆகையால் ஒரு கதையை கூட என்னால் ஒரு நாளைக்கு படிப்பது என்பது எப்போது பெரிய சங்கடமாகி விட்டது.

ஆனால் கதையை ஆற அமர இருந்து சுவையோட படித்தா பிறகுதான் பின்னூட்டம் இடுவேன்.

ஆகையால் தான் என்னுடைய பின்னூட்டங்களின் எண்ணிக்கை உடனே உயர்வதில்லை.
Reply With Quote
  #15  
Old 20-09-12, 05:49 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by குரு View Post
என்னைப்போன்ற புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த திரி அமையும் என்பதில் ஐயமில்லை. நான் பதிவுகள் இடுவதில் இந்த நிமிடம் வரை அவசரம் காட்டியது இல்லை. காரணம் படைப்பை நன்கு உள்வாங்கிக் கொள்ளாமல் மேம்போக்காக இடப்படும் பின்னூட்டங்கள், அருமை சபாஷ் சூப்பர் போன்ற பின்னூட்டங்கள் எத்தகு வலி கொடுக்கும் என்பதை ஒரு கவிஞனாக கதைஞனாக ஒரு கலைஞனாக நான் நன்கு அறிவேன். நான் செல்லும் தளங்களில் நான் துணிவுடன் வலியுறுத்துவதும் இதைத்தான்.

பதிவுகளின் எண்ணிக்கையில் என்ன வாழ்கிறது என்பது எனக்கு புரியவே இல்லை. நூறு பெற்ற கௌரவர்களை விட ஐந்து பெற்ற பாண்டவர்கள்தான் சிறப்பெய்தினர்.

யானை பலவருடங்களுக்கு ஒருமுறை குட்டிப்போடுவதால்தான் அது யானை. தினமும் போட்டால் அவை பன்றிகள்.

இதன்மூலம் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்பும் கருத்து என்ன என்றால்

* படைப்புகளை நன்கு உள்வாங்கி அனுபவித்துப் பின் அவற்றில் என்ன உணர்ந்தீர்கள் என்பதை அப்படியே எழுதுங்கள்.

* படைப்பாளர்களுக்கு நீங்கள் கோடி கோடியாகப் பணம் கொட்டிக்கொடுக்கப்போவதில்லை. உங்களை மகிழ்விக்க படைக்கும் அந்த கலையுலகப் பிரம்மாக்களுக்கு உங்கள் மனமார்ந்த விரிவான பாராட்டுகள் தான் தேவை.

* ஒரு படைப்பு நன்றாக இல்லை என்றால் அதை தெளிவாக பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள், இதனால் படைப்பாளர் மனம் வருந்தும் என எண்ணினால் தரமில்லாத படைப்புகளை அவர் மேலும் மேலும் அள்ளிக்குவிக்க நீங்கள் உடந்தை ஆகிறீர்கள் என்று பொருள்.

* குறைந்த பட்சம் ஐந்துவரிகளாவது பின்னூட்டம் இட்டே தீரவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். எண்மை அல்ல திண்மைதான் பின்னூட்டத்திற்கு அழகும் வலிவும் சேர்க்கும்.

அனைவருக்கும் நன்றி.
ஓரிரு கருத்துகளில் நான் மாறுபட்டாலும் பொதுவாக நண்பர் குரு அவர்களின் தெளிவான சிந்தனையைப் பாராட்டி ஒரு சிறு பரிசை வழங்குகிறேன்.
Reply With Quote
  #16  
Old 20-09-12, 06:34 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

நான் கதைகளை பெரும்பாலும் ஆப் லைனில் படித்து விடுவேன் முதலில். பிறகுதான் பின்னூட்டம் இடுவேன். அப்படிப் பார்த்தால் என் பின்னூட்டங்கள் அதிக பட்சம் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வரும்.
நண்பர் மதனின் கருத்துப்படி பார்த்தால் நான் எண்ணிக்கை கூட்டுவதில் வந்துவிடுவேனே.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #17  
Old 20-09-12, 10:42 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by Mathan View Post
சுவையான வெண்பொங்கலில் அங்காங்கே
கொஞ்சம் மிளகு கிடப்பது போல், கதையின் சுவை குறைந்தது
போல் உள்ளது.
Quote:
Originally Posted by Mathan View Post
அல்வாவிலே இருக்கும் முந்திரி போல்
சுவையும் மனமுமாக கதை பிரம்மாதம்.
Quote:
Originally Posted by Mathan View Post
சொறக்காயில் உப்பு இருந்தது
கோதுமையில் புழு இருந்தது
Quote:
Originally Posted by Mathan View Post
கதையின் நீளம் சற்று தொய்வை தருகிறது.
மற்றபடி கதை பரவாயில்லை
Quote:
Originally Posted by Mathan View Post
பரவாயில்லை
Quote:
Originally Posted by Mathan View Post
கதை அருமை
Quote:
Originally Posted by Mathan View Post
இன்னும் கொஞ்சம் நன்றாக கொடுத்திருக்கலாம்
Quote:
Originally Posted by Mathan View Post
கதை சூப்பர்
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
நானெல்லாம் மொத்தமாக நேரம் கிடைக்கும் போது திரிகளைப் படித்து அதற்கு பின்னூட்டக் குறிப்புகளையும் நோட்பேடில் குறித்து வைத்துக் கொண்டு பிறகு வேறொரு சமயம் வரும் போது அந்த திரிகளை வரிசையாக எடுத்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இடுவதும் உண்டு.. அதனால் நண்பர் மதன் குறிப்பிடுவது போல் அடுத்தடுத்து பெயர்கள் வருவதும் உண்டு.. அதனால் திரிகளைப் படிக்காமலேயே இடும் பின்னூட்டமென்று யாரும் அதைக் கருதக் கூடாது..
Quote:
Originally Posted by KANNAN60 View Post
தோழி புதுமலர் சொல்வதுபோல், இதையும் அடிக்கடி செய்து வருகிறேன்
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
ஏனென்றால், புதுமலர் சொன்னதைப் போல, நானும் செய்துள்ளேன்!
Quote:
Originally Posted by bedroom_salak View Post
இங்கே புதுமலர் மற்றும் கண்ணன் கூறியதுபோலவே, நானும் கதைகளை நேரம் கிடைக்கும்போது, படித்துவிட்டு, பின் சம்யம் கிடைக்கும் நேரத்திலே முடிந்த மட்டும் படித்த கதைகள் அனைத்திற்குமே பின்னூட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்..
Quote:
Originally Posted by nandabalan View Post
நண்பர் மதனின் கருத்துப்படி பார்த்தால் நான் எண்ணிக்கை கூட்டுவதில் வந்துவிடுவேனே
மேலே நான் குறிப்பிட்டுள்ள பின்னூட்டங்களுக்கும் நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

அதனால் தான் நான் அதைப்போன்ற பின்னூட்டங்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே. வெறும் நேரத்தின் அடிப்படையில் மட்டுமே நான் இந்த குறைபாட்டினை தெரிவிக்கவில்லை. நான் குறிப்பிட்டுள்ள பின்னூட்டங்களை நோட்பேடில் சேமித்து வைத்து பின் இங்கே வரிசையாக கொடுக்குமளவிற்கு உகந்ததுமில்லை. போகிற போக்கிலேயே குயிக் ரிப்ளையில் தட்டி விட்டு செல்லக்கூடிய பின்னூட்டங்கள்.

Last edited by Mathan; 20-09-12 at 10:54 AM.
Reply With Quote
  #18  
Old 20-09-12, 11:22 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
ரமழான், ஊர் போனமை எனச் சில காலம் லோகத்துக்கு வராமல் இருந்த கேப்புல நிறைய விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன.

நண்பர் மதனினதும் பொல்லாத ஆசிரியர் கனியூராரினதும் ஏனைய நண்பர்களின் கருத்துக்களையும் படித்தேன்.

ஒரு பின்னூட்டத்தால் பாதிக்கப்பட்டவன் தான் நானும் என்பதால் அதன் வலி எனக்கும் புரிகிறது.

இது சம்பந்தமான எனது கருத்து....
பின்னூட்டங்களை முறைப்படும் போது குறைந்தது வென்கல வாசல் வரை வந்தவர்களைப் பற்றி முறைப்படுவது சிறந்தது என்பது என் கருத்து. அதற்குக் கீழ் உள்ளவர்களைத் தனி மடலில் தொடர்பு கொண்டு ஓரிரு முறை சொல்லிப் பார்க்கலாம். திருந்தலைன்னா கண்டுக்காம விட்றலாம். அவங்க மேல வந்தப்புறம் பார்த்துக்கலாம்...
Reply With Quote
  #19  
Old 21-10-12, 04:11 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
நண்பர் மதனுக்கு ! ..

நான் தங்களிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன்

எனது கதைகளை பொறுத்தவரை ஒரு வரி பின்னூட்டமாக இருந்தாலும் அதில் கூட சத்து இருக்கிறது என எடுத்து கொள்வேன் அதற்கு காரணம் பின்னூட்டமிடுவதில் பல பாகுபாடுகளை நான் இங்கே பார்த்து இருக்கிறேன் அதனால் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்து கொண்டால் நல்லது தானே? ..

இன்னொன்று நான் கூட சில நேரங்களில் வரிசையாக பின்னூட்டங்கள் பதித்ததுண்டு அதற்கு காரணம் ஏற்கனவே அந்த கதையை படித்து இருப்பேன் ஆனால் எதோ ஒரு காரணத்துக்காக பின்னூட்டமிட முடியாமல் போய் இருக்கலாம் !

அதனால் வரிசையாக பின்னூட்டமிடுபவர் ஏதோ எண்ணிக்கையை கூட்டுகிறார் என எப்படி எடுத்து கொள்ள முடியும் ?

பின்னூட்டத்தை பற்றி பல திரிகள் இருந்தாலும் இதுவும் ஒரு திரி அவ்வளவே ! எனக்கென்னவோ இதனால் எந்த மாற்றமும் வர போவதில்லை என்றே தோன்றுகிறது ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #20  
Old 22-10-12, 10:35 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by niceguyinindia View Post
எனது கதைகளை பொறுத்தவரை ஒரு வரி பின்னூட்டமாக இருந்தாலும் அதில் கூட சத்து இருக்கிறது என எடுத்து கொள்வேன் அதற்கு காரணம் பின்னூட்டமிடுவதில் பல பாகுபாடுகளை நான் இங்கே பார்த்து இருக்கிறேன் அதனால் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்து கொண்டால் நல்லது தானே? ..
ஒரு வரி பின்னூட்டத்தை பற்றி நான் ஏதும் குறை கூறவில்லையே !
Quote:
Originally Posted by niceguyinindia View Post
அதனால் வரிசையாக பின்னூட்டமிடுபவர் ஏதோ எண்ணிக்கையை கூட்டுகிறார் என எப்படி எடுத்து கொள்ள முடியும் ?
நான் மேலே திரியில் கொடுத்த உதாரணம் போன்ற பின்னூட்டத்திற்கு நேரம் ஒதுக்கி பின்னூட்டமா ?

நீங்களே சொல்லுங்கள் வரிசையாக எத்தனை கதை / பாகத்திற்கு நீங்கள் நேரம் ஒதுக்கி பின்னூட்டமிடுவீர்கள் ?!

அல்லது

எத்தனை கதை / பாகத்தை நினைவில் நிறுத்தி பிறகு பின்னூட்டமிடுவீர்கள் ?!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:54 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,