<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நண்பர் புழுவார் 1000 பதிவுகளை தாண்டி விட்டார்!
சென்ற வருடம் (2010) லோகத்தில் இணைந்தவர்களில் எனது அருமை நண்பர் புழுவும் ஒருவர். 2010 ல் இணைந்தவர்களில் ஒரு சிலரே தொடர்ந்து பங்களித்தாலும் நண்பர் புழுவின் பதிவுகளும் பின்னூட்டங்களும் கதைகளும் சிறப்பானவை. அவற்றில் முதலாவது 'யானைகள் புல் மேய்வதில்லை'. அதைப்பற்றி நண்பர் பச்சி சொல்லுகிறார் -
Quote:
Quote:
அவர் 1000 பதிவுகளை தாண்டி விட்டார். அவரின் பங்களிப்பு இன்னும் பன்மடங்காக பெருகி நம்மை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்லி அவரை வாழ்த்துகிறேன். வாருங்கள் நண்பர்களே, நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை சொல்லலாமே! |
#2
|
||||
|
||||
வாழ்த்துக்கள் புழுவாருக்கு.
தனக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் படைப்பாளி பெயர் தெரியாமல் படைக்கப்பட்ட வா.ச.52க்கு பல கதைகள் தந்து அசத்தியவர். முதிர்கன்னி போல தளத்திற்கு வரும் போதெல்லாம் படைப்புகள் திரி ஆரம்பிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் நிறைய நேரம் உழைப்பு திறமை வேண்டும், அனைத்தையும் நம் தளத்திற்காக செலவழிக்கும் புழுவாருக்கு பாராட்டுக்கள்.
__________________
Last edited by asho; 16-10-11 at 02:26 PM. |
#3
|
||||
|
||||
நான் தளத்தில் சில காலம் இல்லாதபடியால், எனக்கு இங்கு நிறைய புது உறுப்பினர்களை நான் அறிந்திருக்கவில்லை. பத்து கதைகள் கொடுத்து அசத்திய இந்த வா.சவாலில் தான் புழுவாரை ஓரளவு தெரிந்துக்கொண்டேன். புழுவாரை பற்றிய சிறப்புகளை கோட்டிட்டு காட்டியதன் மூலம் இப்பொழுது அவரது அருமை பெருமைகள அறிகிறேன். புழுவார் மேலும் பல சாதனைகளை படைக்க எனது வாழ்த்துகள்.
திரி ஆரம்பித்த நண்பர் ராஜேஷையும் நான் நடந்து முடிந்த வா.சவாலில் இருந்து தான் அறியமுடிந்தது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் நி.சவாலிலும் உங்கள் திறமைகளை காண்கிறேன். உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பர் ராஜோஷ். |
#4
|
|||
|
|||
மூன்று வருடங்களுக்கு பின்னர் நான் தளம் வந்த போது யானைகள் புல் மேய்வதில்லை என்ற புழு அவர்களின் கதையை படித்து அவரது ரசிகனானேன். சமீபத்தில் கன்னி வேட்டை கழகம் எனும் சரித்திர கதையை தேனினும் இனிய தமிழில் தந்து என் மனதில் இடம் பிடித்தார். காமலோகத்தில் பல கதைகளை தந்தாலும், அவர் ஆக்டிவ்வாக இருக்கும் நேரத்தில் மற்றவர்களின் கதைக்கும் நல்ல உற்சாகமான பின்னூட்டங்களை தருபவர். சமீபத்தில் உடல் நலமில்லா நேரத்திலும் வாசகர் சவால் 52ல் 10 கதைகளும் தந்து எல்லா கதைகளுக்கும் பின்னூட்டமும் இட்டு சிறந்த விமர்சகராகவும் படைப்பாளிகளால் ஏற்று கொள்ள பட்டவர். நண்பர் புழு அவர்கள் உடல் நிலை ஆரோக்கியத்துடனும் அவரது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும் ராசராசனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நான் தான் நண்பர் புழுவுக்கான வாழ்த்து திரிய தொடங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் நண்பர் ராஜேஷ் தொடங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். |
#5
|
|||
|
|||
ஆயிரம் போட்ட அண்ணன் புழுவுக்கு வாழ்த்துகள்.
ஆரம்பத்தில் எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம சுத்திக்கிட்டிருந்த நாளில் இருந்தவருக்கும், யானைகள் புல் மேய்வதில்லை/வா..வா..உனக்காக காத்திருக்கிறேன் எழுதும் புழுவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அருமையான வளர்ச்சி. கதை எழுதுற அளவுக்கு மனுஷன் பின்னூட்டம் போட மாட்டார். அதனால தான் லேட்டா ஆயிரம் போட்டிருக்கார். கொஞ்சமா பின்னூட்டம் போட்டாலும் சும்மா நறுக்குன்னு எழுத ட்ரை பண்ணுவார். அப்புறம் ராஜேஷ் நீங்க அடுத்த ஆயிரமா.. புழுவின் ஆயிரத்துக்கு மீண்டும் வாழ்த்துகள். |
#6
|
|||
|
|||
ஒரு வருடத்தில் ஆயிரம் பதிவுகளா? பெருமூச்சு தான் விடமுடியுது. பாராட்டுக்கள் நண்பா! உன் கதைகளை இன்னும் படிக்கவில்லை, படித்துவிட்டு சொல்கிறேன் எப்படி என...
|
#7
|
|||
|
|||
1000 பதிவுகள் பதிந்த நண்பர் புழுவாருக்கு முதலில் வாழ்த்துகளும், சரியான நேரத்தில் திரியைத் தொடர்ந்த நண்பர் ராஜேஷ்க்கு நன்றியும்!
இந்த 1000 என்ற எண்ணிக்கைக்குள்ளேயே, அருமையான படைப்புகள் ஏராளம். “யானைகள் புல் மேய்வதில்லை” என்ற அற்புதமான கதையைக் கொடுத்து சென்ற வருட “சிறந்த வாசகர் சவால் கதாசிரியர்” என்ற பட்டத்தை வென்றவர். அவருடைய ஒவ்வொரு படைப்பையும் ஆழ்ந்து கவனித்தால் வெவ்வேறு பரிமாணங்கள் புலப்படும். நடுவில் சிலநாள் உடல்நலம் ஒத்துழைக்காத காலங்களிலும் அவ்வப்போது வந்து பின்னூட்டம் இட்டுக்கொண்டிருந்தார். பின்னூட்டங்களில், தட்டிக்கொடுத்தல் - நகைச்சுவை அவரது ஸ்பெஷாலிட்டி! புழுவார் மென்மேலும் லோகத்திலும் தனி வாழ்விலும் உயர்ந்து, நல்லவையெல்லாம் அவருக்கு அமையப்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! ஹேட்ஸ் ஆஃப் டு யு புழுவாரே! |
#8
|
|||
|
|||
தம்பி புழுவின் சாதனையை ஆயிரம் பதிவுகள் என்ற எண்ணிக்கையால் அளவிடுதல் அவ்ற்றின் தரத்துக்குச் சான்றாகாது. அவர் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் தனித்வம் வாய்ந்தது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=56232 புழுவார், ராஜேஷ், நான் மூவருமே சென்ற ஆண்டு சேர்ந்தவர்கள். அவ்ர்கள் இருவரும் பரீட்சை எழுதி பாஸ் செய்து லோகத்தில் நுழைந்தார்கள். நான் பணம் கட்டி இடம் 'வாங்கினேன்' அப்போது சேர்ந்த படைப்பாளிகளில் முதலிடம் நிச்சயமாக தம்பி புழுவாருடையதுதான். அவர் எழுதும் கதைகளில் வெரைடி, நாவல்டி, அப்ராப்ரியேட் ஸ்டைல் -- இவைதான் அவர் தனித்வத்துக்கு மூலகாரணங்கள். வா.ச. 47 போட்டியில் இவர் எழுதிய 9 கதைகளும், வா.ச, 52 போட்டியில் எழுதிய 10 கதைகளும் எதுவாவது ஒன்றுபோல் இன்னொன்று இருக்கிறதா? கதைகளை விடுங்கள்- இவர் போடும் பின்னூட்டங்களும் தனியானவையே. வெகுசில வரிகளில் தான் சொல்ல/கேட்க விரும்பினதை நகைச்சுவையுடன் பின்பாயின்ட் செய்துவிடுவார். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் "கன்னி வேட்டைக் கழகம்" என்ற வரலாற்றுப் புதினத்தையும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிற 'வா,வா, உனக்காகத்தானே....'என்ற திகில் தொடரையும் என்ன அற்புதமாகத் தந்திருக்கிறார். இவர் மட்டும் சமீப காலமாக உடல் நலம் குன்றி அல்லலுறாமல் இருந்தால் நமக்கு இன்னும் எவ்வளவு பொக்கிஷங்கள் கிடைத்திருக்கும்! தம்பி புழுவின் படைப்புகளைகண்டு நான் பொறாமைப்படுகிறேன் -- அவர் என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் விரைவில் பூரண குணம்பெற அன்பு அண்ணனின் ஆசிகள். |
#9
|
||||
|
||||
1000 பதிப்புகளை தாண்டி வலம் வந்துகொண்டிருக்கும் நண்பர் புழுவார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#10
|
|||
|
|||
வெல்டன் புழு. கதைகளால் தனக்கென ஒரு இடத்தை பிடித்த வித்தியாசமான நண்பர்.
தொடர்ந்து பட்டைய கெளப்புங்க நண்பரே. அப்பிடியே ஒடம்ப பாத்துக்கோங்க புழுவாரே! - பிரார்த்தனைகள் நல்ல சுகத்துக்கு. |
Tags |
1000 , நண்பர் , பதிவுகளை , விட்டார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|