Quote:
Originally Posted by Kaathadi
நிர்வாக சவால் பற்றிய வருத்தம் ஒன்று உண்டு. நிர்வாகம் அதிகபட்சமாக 5 பாகம் எழுதலாம் என்பதை 4 பாகம் அல்லது 3 பாகம் என குறைக்கலாம். 5 பாகம் எழுதும் கதைக்கே அதிக ஓட்டுக்கள் விழுகிறது. கதையின் தரத்தை விட அதிக பாகம் உள்ள கதைக்கு ஓட்டுகள் விழுகின்றன, பெரும்பாலும். எனது தொடர்ச்சியும் இழுவை தான். ஆக, ஓட்டுக்காக அதிக பாகம் கொடுக்க வேண்டி உள்ளது. இது இப்படியே இருந்தால் தரமில்லாத கதைகள் அதிகம் சேர வாய்ப்பு உண்டு.
இதை பரீசீலிக்கும்படி வேண்டுகோள் வைக்கிறேன்.
|
நண்பரே... கதையின் பாகங்கள் அதிகம் இருந்தால் அதை வைத்துதான் ஒட்டு அதிகம் போடுகிறார்கள் என்று கணித்திருப்பது தவறுதான்.. கதையை படிக்கும் போது மனதில் தாக்கம் ஏற்படுத்திவிட்டால் பின் அக்கதைக்குதான் ஒட்டு போடுவார்கள்.. அதிக பாகம் எழுதும் கதைகள் எல்லாம் தரம் இல்லை என்று எப்படி கூறுகிறிர்கள்.. மற்ற பகுதிகளில் 100 பாகம், 50 பாகம், 10க்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட கதைகள் இங்கு உள்ளது, அவை எப்போதும் மனதில் நிற்க்கும் மறையா படைப்புக்கள்தான்..
நிர்வாக சவால் போட்டியில் வைக்கப்படுபவை குறுங்கதைகள் அல்ல,, அது ஒரு கதையின் தொடர்ச்சியை முடிவு செய்பவை... ஒவ்வொரு கதாசிரியரும் ஒவ்வொரு விதத்தில் கதையை கொண்டு செல்வார்கள், அதற்க்காத்தான் அதிகபட்ச வரம்பு 5 பாகம் வைக்கப்பட்டுள்ளது..
5 பாகம் கதைகள்தான் வெற்றி பெறுகிறது என்பது முற்றிலும் தவறான எண்ணம்.. தரம் பார்த்துதான் ஒட்டுகள் அளிக்கிறார்கள்..
இப்போது இருக்கும் அதே விதிமுறைகள்தான் இனியும் தொடரும்..
Quote:
Originally Posted by Rassy_Camren
வாசகர்கள் வெறும் பாகங்களைப் பார்த்து மட்டும் ஓட்டுப் போடுகிறார்கள் என்ற தங்களின் வாதம் தவறு என்பது இந்தப் போட்டியில் உங்களுக்கு வந்திருக்கும் ஓட்டுக்களையும் உங்களை அடுத்து வந்தவருக்கு கிடைத்திருக்கும் ஓட்டுக்களையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். இருவரும் 5 பாகங்கள் தானே எழுதினீர்கள்.??
வாக்களிக்க பாகங்கள் மட்டுமல்லாமல் வேறு பல காரணிகளும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். (உமது கதை இழுவை என்பதை மூன்றாம் பாகத்திலேயே நான் சொல்லியிருந்தேன்) கதையின் போக்கு, அதை திசை திருப்பும் விதம், அது எந்த அளவுக்கு மூலக்கதையோடு பொறுந்துகிறது என்று எல்லா விசயங்களையும் பார்த்துவிட்டுத்தான் வாக்களிக்கிறோம்.
14 பாகங்கள் கொண்ட என் கதையை 6 பாகங்கள் கொண்ட வேறொரு நண்பரின் கதை வென்றிருக்கிறது. ஒரே ஒரு பாகம் மட்டும் கொண்ட கதை மொத்த வாக்குகளில் பாதியைத் தட்டிச் சென்றதும் இங்கே நடந்திருக்கும் போது வெறும் பாகங்களின் அடிப்படையில் எல்லாரும் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம்.
உமது 5 பாகங்கள் தான் இந்த வெற்றியைத் தேடித்தந்தது என்று நீர் நினைத்தால் ... என்னத்த சொல்ல..
உமக்கு வாக்களித்தவர்களை நினைத்து பரிதாப்பட வேண்டியதுதான்.
|
ரசி... நீங்கள் அவருக்கு நல்ல பதில் தான் விளக்கமாக தந்துள்ளிர்கள், ஆனால் கடைசியில் பதிந்திருக்கும் பதில் நல்ல விமர்சனம் இல்லை.. இதுபோல் பதியும் ஒரு வரிகள் தான் அதற்க்கு முன் உள்ள பல வரி நல்ல விமர்சனங்களை தாண்டி முன்னால் நிற்க்கும்.. இதை மனதில் வைத்து இதுபோல் சின்ன சின்ன தேவையற்றவைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..
Quote:
Originally Posted by Kaathadi
என்னத்த சொல்லவா? அதான் சொல்லீட்டீர்ல அப்புறம் என்ன?
எனக்கு ஓட்டுப் போட்டவர்களைப் பார்த்து நீர் பரிதாப்பட தேவையில்லை. கதையின் தரம் பார்த்து ஓட்டுப் போடுப்வர்கள் கண்டிப்பாக உண்டு. என் கதையும் சேர்த்துத் தான். காரணி ஊரணி எல்லாம் பார்த்து எல்லோரும் போடுவதில்லை.
|
காத்தாடி.. நண்பரே.. இதுவும் முற்றிலும் நல்ல ஆரோக்கியமான விவாதம் இல்லை.. எந்த பதிவுகளாவது உங்களை பாதித்தால் அதை உடனுக்கு உடன் நேரிடையாக கோட் செய்து பதிக்க முயலாதீர்கள்.. இங்கும் பதில் பதிந்து விட்டு அதன் பின் பெரிய விவாதம் ஆனபின் நிர்வாக கவனத்துக்கு கொண்டு வருவதால் நடவடிக்கை அனைவர் மீதும் எடுக்க வேண்டி கட்டாயம் வந்து விடும்..
Quote:
Originally Posted by Rassy_Camren
முன்னாடி சொல்லியிருப்பதும் நீர் தானே வோய்.. இல்லை அது உமது ஆவியா??
அடுத்த பதிவு செய்யும் முன்னாடி நீர் என்ன பதிவு செய்தீர் என்பதைப் பார்த்துவிட்டு எழுதும்.
முன்பு தரம் பார்த்து ஓட்டுபோடவில்லை என்று வாசகர்களை குறை சொல்லிவிட்டு இப்போது திடீர் ஞானோதயம் எங்கேருந்து வந்துச்சி??
|
ரசி இந்த பதிவும் முற்றிலும் சரியான விவாதம் இல்லை.. தவறானது.. நேரிடையாக இப்படி சாடுவது பெரும் விவாதத்திற்க்கே கொண்டு சென்று விடுகிறது.. இனி இதுபோல் எங்கும் பதிக்காதீர்கள்..