<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சகோதரி முதிர்கன்னிக்கு என் பாராட்டுகள். உங்கள் பணி தொடரட்டும்.
|
#12
|
||||
|
||||
மிக உயரிய விருதான அரிதான விருதான கூல் ரைட்டர் விருதை சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே வாங்கிய முதிர்கண்ணிக்கு பாராட்டுகள். இவர் கதைகள் ஏராளம் காம பொங்கி வழிய எழுதுபவர். கொஞ்சம் அகன்ற பார்வையுடனும் மருத்துவ சிந்தனையுடனும் கதை கொன்டு போவார். இவர் கதைகள் சிலவற்றை நான் படிக்கல ஆனால் படிச்ச கதைகளை வைத்து அலசும் போது இவர் இவ்விருதுக்கு தகுதியானவர் என்று தெளிவாக உனர முடியும்.
பாராட்டுகள் முதிர்கண்ணி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
||||
|
||||
மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே இந்த விருது மேலும் பல படைப்புகளை கொடுக்க ஊக்குவிக்கும் என நம்புகிறேன் தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
|||
|
|||
2010-ஆம் ஆண்டிற்கான 'காமலோக சிறப்பு எழுத்தாளர் விருது' பெறும் நண்பர் முதிர்கன்னி அவர்களுக்கு என் பாராட்டுக்கள். அவரின் சீரிய எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
__________________
|
#15
|
|||
|
|||
நீண்ட கதைகள் படைத்தவர் என்றவுடனே என்னையறியாமல் முதிர் கன்னியின் பெயர்தான் நினைவுக்கு வந்தது. அது போலவே தோழி முதிர்கன்னி அவர்கள் 2010 வருடத்திற்கான கூல் ரைட்டர் விருது பெற்றுள்ளார்கள். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
திகைப்பிலும், எதிர்பாரா மகிழ்விலும் திக்குமுக்காடி நிற்கிறேன்.
மனமுவந்து, தன் கொடைக்குணத்தின் வெளிப்பாடாய், எனக்கு இந்த அங்கீகாரத்தை அளித்துள்ள நம் தளத்தலைவர் முக்குறியோன் அவர்களுக்கு என் முதற்கண் நன்றி. இந்த அங்கீகாரத்தின் அடி நாதமாய் விளங்கும் நம் தள வாசகர்களுக்கு என் நன்றி. நான் மனம் கசந்து தளத்தை விட்டு வெளியேற நினைத்தபோது. என்னை அன்போடு மீட்டு வந்த நல்ல உள்ளங்கள் அனவைரையும் இந்த தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். என்மீதான அன்பாலும், உரிமையாலும், மேலான நம்பிக்கையாலும், என்னை க(கொ)ட்டி இழுத்து வந்த என் மதிப்புறு அசோ சார் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள். சோர்வுற்ற நேரங்களிலும், தயங்கிய நேரங்களிலும், தனி மடலிலும், திரிகளில் தம் பதிப்புகள் மூலமும் என்னை ஆதரிக்கும் என் ஆசான் தங்கர். சி போன்றோர் மிகப்பலர் உண்டு. குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு என்பதால் அத்தகு நண்பர்கள், தோழிகள் அனைவர்க்கும் என் நன்றி. அறிமுகத்திரி இல்லையென இந்த அறிவிப்பில் தலைவர் சொல்லி உள்ளார். தள வாழ்க்கையின் என் ஆரம்ப காலத்தில்யே, அறிமுகத்திரியை எழுதச்சொல்லி, தேவையானால் எந்த உதவியும் செய்வேன் என்று முனைந்த அன்புறு தோழர் பச்சிக்கும் என் நன்றியும் வணக்கமும். என் முதல் சவால் பதிப்பில், நடந்த சிறு குளறுபடியையும் சொல்லி, அதுவும் நல்லதற்கே, வெற்றி பெற்றால் நேராக தங்க வாசலை அடைவீர்கள் என்று வாழ்த்திய என் நெடுநாள் நண்பர். பில்லா அவர்களுக்கும் நன்றி. என்னையும் அன்போடு ஏற்று, எனக்கென ஒரு பாராட்டுத் திரியை தொடங்கிய தோழி(?) மீனாமீனா அவர்களுக்கும் என் நன்றி. இப்போது கூட, இப்படி ஒரு அங்கீகாரம் எனக்கு கிடைத்துள்ளதையும் அதன் மீதான தன் மகிழ்வையும் - வழக்கம்போல - தனி மடல் மூலம் தெரிவித்த அன்பு நண்பர் மரியா போன்ற தோழர்களை இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். முடிவில்லாமல் நீளும். எனவே “எந்தரோ மஹானுபாவடு, அந்தரிக்கும் மா வந்தனம்" இந்த அங்கீகாரத்தின் மகிழ்வாய் நான் எழுதும் அடுத்த தொடர் "காதலும்……………...நட்பும்………………மாறும்" பாகம் 1 இங்கே: பிரியங்களுடன், முதிர்கன்னி பி.கு: சுந்தர தெலுங்கு என் தாய் மொழி அல்ல. எனவே கடைசி வரியில் தவறு இருப்பின் மன்னிக்கவும். Last edited by muthirkanni; 28-07-11 at 10:40 PM. |
#17
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளராக தேர்வாகியிருக்கும் முதிர்கன்னிக்கு எனது பாராட்டுக்கள். என்றோ செய்த சிறு உதவியை நீங்கள் நினைத்து பார்த்து இன்று நினைவுபடுத்தியது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
|
#18
|
|||
|
|||
சற்றும் சலைக்காமல் என்னை வியக்க வைத்து எழுதிக் கொண்டிருக்கும் தோழியின் எழுத்துப் பணிக்கு மிகப் பொருத்தமான விருது..
விருதைப் பெற்ற தோழிக்கு பாராட்டுக்களையும் விருதுக்குத் தோழியைத் தேர்ந்தெடுத்த நிர்வாகத்துக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. |
#19
|
|||
|
|||
மிக உயரிய விருது பெற்று வைரமாக ஜொலிக்கும் என் அன்பு தோழி முதிர்கன்னி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பொறுப்பான விருதை பொருத்தமானவருக்கு வழங்கிய தலைமை நிர்வாகி முக்குறியோனுக்கு பாராட்டுகளோடு நன்றி... மற்றும் தள நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி...
முதிர்கன்னியின் எழுத்துக்களைப் பற்றி தனியே இங்கு விமர்சிக்க அவசியம் இல்லை. அது நாம் அனைவரும் அறிந்தது, உணர்ந்தது, அனுபவித்து மகிழ்வது! படைப்பாளிகளாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் முதலாவது அவரது அயராத உழைப்பு. கதை பதித்த அனைவரும் அறிவோம் ஒரு கதை எழுத ஆகும் நேரம் எத்தனை என்று!. ஒரே ஆண்டில் 97 அத்தியாயங்கள் என்பது 'அடேங்கப்பா' சங்கதி மட்டுமல்ல, 'வாவ்' என வாய் பிளக்க வைக்கும் விசயம். கதைகளை வாசிப்பதற்கும், வாசித்த கதைகளுக்கு பின்னூட்டமிடுவதற்கும் மலைத்துப் போகும் அடியேன் உங்களை வாழ்த்துவதை விட வணங்குவதே பொருத்தமாக இருக்கும். வணங்குகிறேன் தோழி! அடுத்து அவரது பண்பு. லோகத்தில் அறிமுகமாகி பழகும் போது நமக்குள் ஏற்படும் நட்பின் உரிமையில், அன்பின் இறுக்கத்தில்/முதிர்வதில் நம்மில் பெரும்பாலோனோர் இழந்து விடும் 'சபை மரியாதை'யை ஒரு முறை கூட எனக்குத் தெரிந்து எவரிடமும் அவர் குறைத்துக் கொண்டதில்லை. 'தோழரே', 'தோழியே' என்பதைத் தவிர வேறு எந்த பதத்திலும் ஒருவரை அணுகாத பக்குவம் அவரது இயல்பு. அது அவரின் கதைகளிலும், கதை மாந்தர்களிலும் கூட இயல்பானதாகவே இருக்கும். மிக முக்கியமான இன்னொன்று அவரின் கதைகளின் 'உயிர் நாதமான' காதலோடு காமம் என்னும் தத்துவம். கிட்டத்தட்ட அவரின் எல்லா கதைகளிலும் வெளிப்படும் உயர்ந்த விசயம் அது. நம்மில் பலர் காமத்தை உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்பதோடு வடிந்ததும் அடங்கி, மீண்டும் பொங்கும் போது அலையும் ஆயாசமான விசயமாக சித்தரிக்கையில் அவரது கதைகள் மட்டும் ஆசுவாசப்படுத்தும் விதமாக இன்று வரை அமைவது ஆச்சரியப்படத்தக்கது. அருவெறுத்து முகம் சுளிக்க வைக்கும் எல்லைக்கு இம்மி வரை நம்மை ஆனந்தித்து ரசிக்கும் படி அழைத்துச் செல்லும் 'லாவகம்' இவரைப் போல் (அடியேன் அறிந்த மட்டும்) தளத்தின் எந்த படைப்பாளியிடமும் இல்லை என்பதை அறிதியிட்டே கூறலாம். விமரிசனங்களை எதிர்பார்ப்பதிலும், எதிர்கொள்வதிலும் எல்லா படைப்பாளிகளைப் போலவும் ஆரம்பத்தில் உணர்ச்சிக் குவியலாக இருப்பது போல தோன்றினாலும் வெகு விரைவில் 'எழுதுவது எனது சுதர்மம்' 'ஏற்கும் விதம் அவரவர் சுதர்மம்' என்ற பக்குவத்தை தொட்ட முதிர்ந்த கனி அவர். (அவரின் சமீபத்திய படைப்பு ஒன்றிற்கு அடியேன் அனுப்பிய விமர்சன மடல் போல எவரேனும் எனக்கு அனுப்பி இருந்திருந்தால் அவரை வசைபாட மட்டுமே 108 பக்கங்கள் தட்டி இருப்பேன். இருந்தாலும் அதையும் பொருமையாக ஏற்று அமைதியாய் இருப்பவர் அவர்). எல்லாவகையிலும் சிறந்த, சிறப்பியல்புகளின் சிகரமான தோழி முதிர்கன்னியை வாழ்த்தி வணங்குகிறேன். மேன்மேலும் தங்கள் பணி தொடர்க... இன்று பட்டம் பெற்ற முதிர்கன்னிக்கு என்றோ ஒருநாள் அவரது ஒன்றாம் வகுப்பு ஆசானாக இருந்ததற்கு அடியேனும் பெருமை கொள்கிறேன். |
#20
|
|||
|
|||
வாழ்த்துக்கள் முதிர்கன்னி..... கடும் உழைப்பால் கூல் ரைட்டர் ஆக மாறியமைக்கு
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|